துணை

Written By: Lalitha Kumari
Translated By: Gowri Kiribananthan

மாலை ஐந்து மணியைத் தாண்டிவிட்டது. அலுவலகத்தில் எல்லோரும் போய்விட்டார்கள் என்று ப்யூன் வந்து சொன்ன பிறகு வேறு வழியில்லாதவனாய் கங்காதரன் எழுந்துகொண்டான். குளிர்காலம் என்பதால் சீக்கிரமாகவே இருள் கவிழ்ந்துக் கொள்ளத் தொடங்கியது. அந்த இருட்டைப் பார்க்கும் போது கங்காதரனின் மனம் முழுவதும் வேதனை சூழ்ந்துகொண்டது. இருண்டுபோன முகத்துடன் அந்த இருட்டைப் பார்த்தபடி அப்படியே நின்றுகொண்டிருந்தான். Continue reading

Posted in சிறுகதைகள் | Leave a comment

கடைசி இருக்கை

மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்
சிறு உடைசல்களோடுமாய்
எல்லா வகுப்பறைகளுக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பேரலையின் முடிவினிலே……

கலர்கலராய் ன்ஜிக்கள்
காது குளிரும் வாக்குறுதிப் பொதிகள்
ஊருக்குள்ளேயதன் முகவர் மட்டுமே
மாடத்து வாசமுடன்
குளிர்பதன பவனிவர
நாங்கள் மட்டுமின்னும்
நலன்புரிநிலைய சாக்கடைக்குள்
தெருவோர எச்சில் பொறுக்கிகளாய்…

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

Posted in கவிதைகள் | 1 Comment

பச்சைப் பொய்கள்…

இப்போதெல்லாம் உலக மகாமரம்
வெறும் பச்சைப்பொய்களாகவே தன் காய்களைத்
தொங்கவிடப் பழகியிருக்கிறது.
எதைவிடுவது? எதைத் தொடுவது?
எங்குமே –
நாறும் கானில் நனைந்த வன்னுரையாய்
ஊறிப் பருத்துக் கனமேறிய பொய்கள் Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

பாகற்காய்த் தீவுகளுக்குள் சிட்டுக்குருவிகளின் சிறைவாசம்..

உயரப்பிடித்த குடையுள்ளும்
உச்சி வெயிலின் உப்பு மழை
உள்ளோடி நனைக்க, வீடேகிய வேளையிலும்
மீண்டும் தேடுது பள்ளியையே மனவலைகள்.
ஓவ்வோர் சீருடைத்
தேன்சிட்டுகளின்தேனிதழ்க்
குறுநகையின் பின்னேயும்
விரிந்து கிடக்குது சோக சரித்திரங்கள்
தனித்தனியே
கண்ணீர் சமுத்திரங்களாய். Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

தொலைந்துபோன ஒற்றைப்பாதணி…

பஸ்ஸிலோ ரயிலிலோ
பிசுபிசுத்து வழியும் அவசரப் பயணங்களின்
ஏற்ற இறக்கங்களிலே
மடி நிறைந்த மலரின் நலனில் மட்டுமே
குவியமிடும் கவனங்களை விட்டும்
இடறித்தான் போய்விடுகிறது
சில பொழுதுகளில்
அதன் ஒற்றைப் பாதணி.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.
Posted in கவிதைகள் | Leave a comment

ஒற்றைவரி…

வேலைநாட்களின் மிச்சசொச்ச வேலைகளையும்
வாரிச்சுருட்டிக்கொண்டே வந்துசேருகிறது
விடுமுறையென்ற பெயரில்
அதிபளுவோடு கூடிய இருவேலைநாட்கள்.
விடிவெள்ளி உதிரா
விடிகாலை உறைபனியில்
முற்றிப்பழுத்தே உதிர்ந்து கிடக்கும்
முற்றத்து மாந்தளிர் பெருக்குவதில் தொடங்கி
முன்னிரவில் படுக்கையறை
சீர்செய்வதோடு முடிந்து விடுகிறதா வேலைகள்? Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

ஓளி விசிறும் சிறுபூ…

என்றைக்குமே விலக விரும்பாத
ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம்.
தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை
என் வழிப்பயணத்தின் கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான். Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

நல்லதோர் கவிதை நெய்தே………!

செவிப்பறை யுரசும்
குரலோசையில் மடல் திறக்கும்.
ஷவர்த்தேனும் நுரைப்பூவும் ஸ்பரசித்தே
மெய்சிலிர்க்கும்.
அதிகாலைப் பிரார்த்தனைக்காய்
நிலமுரசும் நுதலினிலே
சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும்.
சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள்
நெருப்பாகிப் புகைந்திருக்கும்.
அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள்
தகித்திருக்கும்.
ஒப்பனைக்கு மட்டும் நாழியின்றியே அவசரம்
கதவடைக்கும். Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

நானாகவே…

மறுபடியும்
தொலைபேசிச்சிணுங்கல்
மரணபயம் எனக்குள்ளே!
படபடப்பாய் வியர்த்துச்சிறுக்கிறது
இருதயம்!
நடுங்கும் விரல் நுனிகளுக்கும்
செவிப்பறைக்கும் இடையிலோர்
மனிதமிருகம் -தனதான
பிறப்பின் முழு ரகசியங்களையும்
படு அநாகரீகமாய் ஒலிவடிவமிட்டபடி
தன்கோரநாவினாலென்
உணர்வுகளை வராண்டுகிறது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment