கருஞ்சுவரில் குழாய் வரைந்து..


ஆவலை மின்னவிட்டவாறே
இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.
எப்போதும் போலே
எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மைதானம்

உதைத்தலின்போதே நிகழ்ந்துவிடுகிறது

உதைபடுதலும்
வலிமையின் தீவிரங்களில்தானே
வலியின் உச்சங்கள்
ஒரு குண்டுமுனைக் காந்தம்போலே
வளரிளம் பருவத்தர் பார்வைதனை
வெகுஇயல்பாய் ஈர்த்துவிடுகின்றன விளையாடல்கள்
ஆனாலும்
வெறும்பாடநூலுக்காய்
எப்போதுமே அப்புலந்தனைச்
சிதைப்பதிலேயே குறியாயிருப்பர் தந்தையர்
காலங்காலமாய் களைக்காமலேயே
ஓடி உதைத்து விளையாடுமிவர்
சொற்பந்துகளுக்குள் அதிர்ந்து நசுங்கி
மூச்சுத் திணறுகிற மைதானமாய்  அன்னையர்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

Posted in Uncategorized | Leave a comment

உன்னிரு மின்வரிகள்

கமழும் பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்தி வருமென்
ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப் பதிலாய்…..
வானம் பத்திரப்படுத்தும் அபூர்வ மின்னலென…..
இருந்து நின்று எப்போதாவது வந்துசேரும்
விளிப்பு முடிப்பற்ற உன்னிரு மின்வரிகள். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி..

குவிந்த விரல்களூடே
குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற
உள்ளங்கைச் சிறைக்குள்
படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள்
குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை.
கரைந்திடுங் கணங்களில்
வர்ணங்களின் பிசுபிசுப்பும்
படபடப்பின் அமர்முடுகலும்
ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு
சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ
விண்ணளவுக்குமான அதன் விடுதலையை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிழைபிழையான இனங்காணல்…

பிழையான அவதானங்களும்
பிழையான கருதுகோளுமாய்
நிகழ்ந்தேறிய சோதனை முடிவது
துர்மணமாய்
குடுவைதனைச் சுற்றிச் சுழன்றதில்
ஆய்வறை தாண்டியே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாசகர்களின் கைதட்டல்களே ஓர் எழுத்தாளனை ஊக்குவிக்கும்..

ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஆசிரியை ஜெனீரா ஹைருல் அமான் குறிப்பிடத்தக்கவர்.
பாலர் பாடல் சிறுவர் இலக்கியம் (1991), சின்னக்குயில் பாட்டு சிறுவர் இலக்கியம் (2009), பிரியமான சினேகிதிசிறுகதைத் தொகுதி (2009), மிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் (2010) என பல நூற்களுக்கு சொந்தக்காரர். சிறுவர் இலக்கியத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர்.
சின்னக்குயில் பாட்டுக்காக சிறந்த நூலுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது 2010 உட்பட பிரதேச, மாவட்ட மட்டங்களில் விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவர்.
இன்னும் சில நூற்களை அச்சு வாகனத்தில் ஏற்றத் தயாராகிக் கொண்டிருக்கும் இவர், நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இலங்கை வானொலியிலும் பல நூறு ஆக்கங்களோடு வலம் வந்தவர் வருபவர். அவருடைய எழுத்துலகம் பற்றி மேற்கொண்ட உரையாடலை பெண்கள் தேசம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். Continue reading
Posted in கலந்துரையாடல்கள் | Leave a comment

சிறுமீனாய்..

நீலப்பச்சையாய் நீளப்பரவிய

பசுமைகளின் ஆழங்களூடே

உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட

மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே

தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்

சில்லெனும் குளிரோடை மறைத்தபடி

அனல் சொரிகிறாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாக்கியவதிகள்..

ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்களை விட்டும்

ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது

ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.

பலவேளைகளில்

பாதப் பெருவிரல் சுரண்டுகிற

செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்

மிகச்சில பொழுதுகளில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எளிமையான மொழியும் தன்னுணர்வு சார்ந்ததுமாய் கிராமியமணம் குன்றாமல் ஜொலிக்கும் கவிதைகள்..

கண்ணுக்குச் சற்றும் புலப்படாமல் மண்ணுக்குள் புதைந்து வாழும் மண்புழு தொட்டு கடலின் மிக ரகசியமான புதர்களில் நீந்தும் மீன் கூட்டங்கள் வரையும் நொடியில் உடையக் காத்திருப்பவைகள்தான்… எனச் சொல்லும் கவிஞர் ஜமீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பே உடையக் காத்திருத்தல்.

1993 இல் சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கும் கவிஞர் ஜெமீலின்முதல் கவிதைத்தொகுதி தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும் தடாகம் இலக்கியவட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றிருப்பது குறித்துச் சொல்லப்படவேண்டியவை.

தென்னிந்தியப்  பதிப்புகளுக்கு நிகரான  தளக்கோலம்.  பிளவுகள்நிறைந்த கற்சுவரும் குருதி கசியும் ஒற்றைவிழியோடான பெண்ணின் பாதிமுகமுமாய் கவிஞர் நவாஸ்சௌபியின் அட்டை வடிவமைப்பு தலைப்போடு வெகுவாய் ஒன்றிநிற்கிறது.

உள்ளே  60 இற்குமதிகமான கவிதைகள்  எளிமையான மொழியும் பரவலான  களமும் தன்னுணர்வு சார்ந்துமாய்  கிழக்கின் கிராமியமணம்  குன்றாமல்ஜொலிக்கின்றன. Continue reading

Posted in நூலாய்வுகள் | Leave a comment

தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்…


இன்னும் முகையவிழாத பிறை
கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி
திரியாகிப் பற்ற வைக்கிறது
திசைகளை
புள்ளியாய் விரியும் பெருநாள்
உலகமகா பாவிகளின்
கிழிசல்களைத் தைத்து
கந்தல்களைத் துவைத்து

பெருநாளினை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில் ,கரம் சேர்ந்திருந்த  சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட  எதுவும் பேசாத மழை நாளின் மூன்றாவது கவிதையின் சில வரிகளிவை. Continue reading

Posted in நூலாய்வுகள் | Leave a comment